முகப்பு
இந்தியா

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் மீது மை வீச்சு

முகமூடி அணிந்த நபர்கள் காங்கிரஸ் தலைவரின் மீதான மை வீச்சு

Updated On : 21 ஜூன், 2024 at 10:17 PM
பகிர்:

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக் மீது முகமூடி அணிந்த இரு நபர்கள் மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக். இன்று காலை 11.30 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் பட்நாயக்கின் அறைக்குள் நுழைந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் அவரது ஆடையில் நீல மையை தெளித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர். இதனால் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

Advertisement

இதுகுறித்து பட்நாயக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற சம்பவங்களால் நான் பயப்படவில்லை.

மாநிலத்தில் காங்கிரஸின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் இதன் பின்னணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

பின்னர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்றார். பாஜக செய்தித் தொடர்பாளர் திலீப் மல்லிக் கூறுகையில், இந்தச் சம்பவம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலின் விளைவாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.