முகப்பு
இந்தியா

அரசியலமைப்பை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது: ராகுல்

இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஜூன், 2024 at 2:47 PM
ராகுல் காந்தி
பகிர்:

இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

"அரசியலமைப்புச் சட்டம் நம் நாட்டில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாகும். கடந்த 10 ஆண்டுகளில், பாஜக அரசு இந்த பாதுகாப்பு கவசத்தை பல வழிகளில் சேதப்படுத்த முயன்றது மற்றும் மக்களின் உரிமைகளை தாக்கியது.

அரசியலமைப்பின் நகல் எங்கள் கைகளில், அதன் மதிப்புகள் இதயங்களில்! உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது - இந்தியக் கூட்டணி தனது முழு பலத்துடன் அதை பாதுகாக்கும்.

பிரதமரும், அமித் ஷாவும் அரசியல் சாசனத்துக்கு என்ன செய்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது... அதை நடக்க விடமாட்டோம், அதனால்தான் பதவிப்பிரமாணம் செய்யும் போது அரசியலமைப்பு நகலை எடுத்துச் சென்றோம்.

இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் தொட முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →