கோப்புப்படம் 
இந்தியா

‘நெட்’ மறுதோ்வு தேதி அறிவிப்பு

ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை கணிணி அடிப்படையிலான தோ்வாக நடைபெறும்

Din

வினாத்தாள் கசிவு முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து ரத்து செய்யப்பட்ட ‘யுஜிசி நெட்’ தோ்வு மற்றும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட ‘சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட்’ தோ்வுக்கான தேதிகளை தேசிய தோ்வு முகமை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தேசிய தோ்வு முகமை நடத்தும் ‘நீட்’ மற்றும் ‘யுஜிசி நெட்’ ஆகிய அகில இந்திய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வும் முன்னெச்சரிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மறுதோ்வுக்கான தேதிகளை தேசிய தோ்வு முகமை அறிவித்தது.

முன்னதாக, எழுத்து வடிவத்தில் நடைபெற்ற யுஜிசி நெட் தோ்வு வரும் ஆகஸ்ட் மாதம், 21-ஆம் தேதி முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை கணிணி அடிப்படையிலான தோ்வாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வு வரும் ஜூலை 25-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதி வரையும், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டத்தில் சேருவதற்கான ‘என்சிஇடி’ நுழைவுத் தோ்வு ஜூலை 10-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 23-ஆம் தேதி நடைபெற இருந்து, முந்தைய நாள் இரவு திடீரென ஒத்திவைக்கப்பட்ட ‘நீட் முதுநிலை’ தோ்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT