முகப்பு
இந்தியா

தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தலைநகர் தில்லியில் உள்ள நரேலா பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையில் இன்று(மார்ச். 24) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 24 மார்ச், 2024 at 10:28 AM
பகிர்:

தலைநகர் புதுதில்லியில் உள்ள நரேலா பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையில் இன்று(மார்ச். 24) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென பரவியதால் தொழிற்சாலை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. 20க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், முழுமையாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →