FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தலைநகர் தில்லியில் உள்ள நரேலா பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையில் இன்று(மார்ச். 24) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 24 மார்ச் 2024, 3:58 pm IST
- படம் | பிடிஐ
பகிர்:

தலைநகர் புதுதில்லியில் உள்ள நரேலா பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையில் இன்று(மார்ச். 24) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென பரவியதால் தொழிற்சாலை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. 20க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், முழுமையாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments