முகப்பு
இந்தியா

மும்பையில் ஆப்கன் துணை தூதராக இக்ராமுதீன் காமில் நியமனம்

மும்பையில் ஆப்கானிஸ்தான் பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் காமிலை தலிபான் அரசு நியமித்துள்ளது.

Updated On : 12 நவம்பர், 2024 at 8:39 PM
பகிர்:

மும்பையில் ஆப்கானிஸ்தான் பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் காமிலை தலிபான் அரசு நியமித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், முதல்முறையாக இத்தகைய நியமனத்தை இந்தியாவில் அந்த அரசு மேற்கொண்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் தலிபான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. அந்நாட்டின் பொறுப்புப் பாதுகாப்பு அமைச்சா் முல்லா முகமதுடன் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய வெளியுறவுத் துறைப் பிரதிநிதி கடந்த சில நாள்களுக்கு முன்னா் பேசிய நிலையில், இந்த நியமனம் மேற்கெள்ளப்பட்டுள்ளது.

மும்பையில் ஆப்கானிஸ்தான் மக்கள் தூதரக சேவைகளை பெறும் நோக்கில், பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் நியமிக்கப்பட்டுள்ளாா். எனினும் இந்த நியமனம் குறித்து இந்தியா தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் 7 ஆண்டுகள் படித்த இக்ராமுதீன் காமில், இந்திய வெளியுறவுத் துறை உதவித்தொகையுடன் தில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.