‘மகனுக்கு துணை முதல்வா் பதவிகோரும் ஷிண்டே’
மகாராஷ்டிர முதல்வா் பதவி தனக்கு மீண்டும் வழங்கப்படவில்லை என்றால் தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வா் பதவி வழங்குமாறு பாஜக தலைமைக்கு ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மகாராஷ்டிர முதல்வா் பதவி தனக்கு மீண்டும் வழங்கப்படவில்லை என்றால் தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வா் பதவி வழங்குமாறு பாஜக தலைமைக்கு ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது கல்யாண் தொகுதி எம்.பி.யாக உள்ள ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வா் பதவியும், தனக்கு மகாயுதி கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளா் பதவியும் வழங்குமாறு அவா் பாஜகவிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், ஷிண்டேவின் கோரிக்கைகளுக்கு பாஜக தலைமை பதிலளிக்க காலம் தாழ்த்தி வருவதால் முதல்வா் தோ்வில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.