சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது உத்தவ் தாக்கரே அணி!
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகரின் முடிவை எதிர்த்து திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் சென்றது உத்தவ் தாக்கரே அணி.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகரின் முடிவை எதிர்த்து திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் சென்றது உத்தவ் தாக்கரே அணி.
சிவசேனையில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய உத்தவ் தாக்கரே அணியின் கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் ஜனவரி 10ஆம் தேதி நிராகரித்தார். மேலும் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனை என்று அறிவித்தார்.
இதையும் படிக்க | பாஜக தேர்தல் நேரத்தில் பழங்குடியினரை ஏமாற்ற முயற்சிக்கிறது: கார்கே குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தலைவரின் இந்த முடிவை எதிர்த்து சிவசேனை உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி இன்று (ஜன.15) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விலகி தனி அணி அமைத்தனர்.
அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது ஜன.10ம் தேதி தீர்ப்பளித்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனை என்று அறிவித்தார்.
இதையும் படிக்க | இந்த விடியோக்கள் போலியானவை: சச்சின் டெண்டுல்கர் மறுப்பு!
முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தீர்ப்பளிப்பதற்கு முன்பு ஜன.7ம் தேதி முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்திற்கு சென்றுவந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.