முகப்பு
இந்தியா

அசாமில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது: ராகுல்!

அசாமில் ஊழல் நிறைந்த அரசு நடைபெறுவதாகக் காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். 

Updated On : 18 ஜனவரி 2024, 12:32 pm IST
பகிர்:

அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி நடத்துகிறது. டைபெறுவதாகக் காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். 

ராகுல் காந்தி கடந்த ஜன.14-ம் தேதி மணிப்பூரில் காங்கிரஸின் பாரத் ஜோடா நியாய யாத்திரையைத் தொடங்கினார். யாத்திரையின் ஐந்தாவது நாளாக நாகாலாந்தின் தூலியிலிருந்து அசாமில் உள்ள ஜோர்ஹாட் வரை மீண்டும் தொடங்கியது. அசாமில் உள்ள சிவசாகரில் யாத்திரைக்கு முன்னதாக கொடி ஒப்படைப்பு  விழா நடைபெற்றது. 

அப்போது அவர் பேசியது, நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக-ஆர்எஸ்எஸ் அநீதி இழைத்து வருகிறது. மணிப்பூரில் உள்நாட்டுப் போர் சூழல் நிலவுகிறது. இதுநாள் வரை பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்குச் செல்லவில்லை. ஆனால், நாகாலாந்தில் பெரிய வாக்குறுதிகள், 9  ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம் என்ன ஆனது என்று நாகாலாந்து மக்கள் கேட்கிறார்கள்? 

Advertisement

Advertisement

இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசாங்கம் அசாமில் நடைபெறுகிறது. நாகாலாந்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அசாமிலும் நாங்கள் அதைப் பெறுவோம் என்று நம்புகிறேன். அனைவரையும் ஒன்றிணைக்கவே இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments