முகப்பு
இந்தியா

ஒடிசாவில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

Updated On : 19 ஜனவரி 2024, 11:35 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு கேசரிபட்னா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததாகவும், இரண்டு இருசக்கர வாகனங்களிலும் தலா மூன்று பேர் பயணித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பார்வைத் திறன் குறைவாக இருந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

உயிரிழந்தவர்கள் அஷுராபந்த் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கௌடா, மனோஜ், கோபால்பூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திர நாயக், சோரடாவைச் சேர்ந்த ஜெயந்த் மற்றும் ரஜனி கவுடா என்று அடையாளம் காணப்பட்டனர்.

43 வயதான ரஜனியைத் தவிர, மற்ற அனைவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.

இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெயந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிர்பிழைத்த ஒருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் கூறினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments