ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பால்த் கிராமத்திற்கு அருகே பசந்தர் ஆற்றின் கரையில் கைவிடப்பட்ட குண்டுகள் குறித்து உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனே வெடிகுண்டு அகற்றும் படை சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து அந்த வெடிகுண்டுகளை அப்புறப்படுத்திய அவர்கள், பின்னர் அவற்றை எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக அழித்தனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளை எட்டியது.
இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதை பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்திய ராணுவத்தின் சினர் கார்ப்ஸின் கூற்றுப்படி, சனிக்கிழமை இரவு முழுவதும் இடைவிடாது துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. ஆனால் கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.