உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!
உத்தரகண்ட் பேரிடரில் 28 கேரள சுற்றுலாப் பயணிகள் மாயமானது குறித்து...
உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் கங்கையில் உண்டான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால், உத்தரகாசி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவினர், மேகவெடிப்புக்கு பின் மாயமாகியுள்ளதாகவும், அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதில், 20 பேர் மகாராஷ்டிரத்தில் குடியேறியவர்கள் எனவும், மீதமுள்ள 8 பேர் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, மாயமான சுற்றுலாப் பணிகளின் உறவினர் ஒருவர் கூறுகையில், இறுதியாக அவர்கள் அனைவரும் நேற்று (ஆக.5) காலை 8.30 மணியளவில் உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம் எனக் கூறியதாகவும், அதையடுத்து, அவர்களது பயண வழியில் நிலச்சரிவு ஏற்பட்ட பின்பு, அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாயமானவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த ஹரித்வாரைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்துக்கு அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஆக.5 ஆம் தேதி மதியம் ஏற்பட்ட மேகவெடிப்பினால் உண்டான இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வீட்டுக்குள் வந்த கங்கை வெள்ளம்! பூஜை செய்த உ.பி. காவலர்கள்
A tourist group of 28 people from Kerala have reportedly gone missing in a cloudburst disaster in Uttarakhand.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.