வாக்குத் திருட்டு: தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி தடுத்து நிறுத்தம்!
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டின் கீழ், தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணியாகச் சென்ற நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
புது தில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக புறப்பட்ட நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.
பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டியில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. ராகுல் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு முன்வைத்திருந்த நிலையில், அதனை தங்களிடம் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது.
Advertisement
Advertisement
இன்று காலை வழக்கம் போல நாடாளுமன்றம் கூடியி நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில், தடுப்புகள் மீது ஏறிச் செல்ல அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, துரை வைகோ, சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பேரணியாகப் புறப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரியங்கா உள்பட ஏராளமான எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
Protesting oppn MPs stopped by police barricades at Transport Bhawan to prevent them from moving forward to EC hq.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.