FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வரியிலிருந்து தப்ப.. டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்! சொல்வது யார்?

வரியிலிருந்து தப்ப, டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம் என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யோசனை.

Updated On : 15 ஆகஸ்ட் 2025, 12:24 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

டிரம்ப் வரி விதிப்பை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில், நடந்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு ஒரு உபாயமும் சொல்லியிருக்கிறார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இழுபறியில் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு 50 சதவீத விரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவுக்கு ஒரு யோசனை தர விரும்புகிறேன். அதாவது, பிரதமர் மோடி, டிரம்புக்கு, அமைதிக்கான நோபல் அமைதி பரிசு கொடுக்கலாம் என பரிந்துரை செய்தால் ஒருவேளை டிரம்ப் வரி விதிப்பு திரும்பப் பெறப்படலாம் என்று கிண்டலடித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், பாகிஸ்தான், அப்படிக் கூறிதான் டிரம்பை ஏமாற்றியிருக்கிறது. பாகிஸ்தான், வரும் 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு டிரம்ப் பெயரை பரிந்துரைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் பொருந்தும், வேறு எந்த ஒரு நாடும், டிரம்ப் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தால் போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments