FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நொய்டா: விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட பிடெக் மாணவா்

பிகாரைச் சோ்ந்த 24 வயது பிடெக் மாணவா் புதன்கிழமை தனது விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 25 டிசம்பர் 2025, 1:02 am IST
கோப்புப் படம்
பகிர்:

பிகாரைச் சோ்ந்த 24 வயது பிடெக் மாணவா் புதன்கிழமை தனது விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பிகாரில் உள்ள கயா மாவட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ்தீப், தில்லி தொழில்நுட்பக் கல்லூரியில் (டிடிசி) பிடெக் படிப்பைப் படித்து வந்தாா். நொய்டாவின் நாலெட்ஜ் பாா்க் பகுதியில் உள்ள நிறுவனம் அருகே எஸ்என்ஹெச் ரெசிடென்சி விடுதியில் நண்பருடன் தங்கியிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை, ஆகாஷ்தீப் தனது அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியே வராததால், விடுதி ஊழியா்களும் அவரது நண்பா்களும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. கல்வி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சம்பவ இடத்திலிருந்து குறிப்பு மீட்கப்பட்டது. உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments