நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி. 
இந்தியா

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்!

அஸ்ஸாமில் நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி...

DIN

அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் மோரிகான் நகரை மையமாக கொண்டு 16 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குவாஹத்தி உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிஸா மாநிலம் புரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கொல்கத்தா மற்றும் ஒடிஸாவின் பல்வேறு இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT