முகப்பு
இந்தியா

3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீடு ரத்து!

தில்லி முதல்வருக்கான பங்களா ஒதுக்கீட்டை மத்திய அரசின் பொதுப்பணித்துறை ரத்து செய்துள்ளது.

Updated On : 7 ஜனவரி 2025, 9:51 pm IST
அதிஷி - PTI
பகிர்:

தில்லி முதல்வருக்கான பங்களா ஒதுக்கீட்டை மத்திய அரசின் பொதுப்பணித்துறை ரத்து செய்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் இது குறித்து மேலும் அதிஷி பேசியதாவது,

Advertisement

Advertisement

தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதேவேளையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு முதல்வர் இல்லத்திலிருந்து என்னை இரண்டாவது முறையாக வெளியேற்றியுள்ளது.

குடியிருப்புகளில் இருந்து அகற்றுவதன் மூலம் எங்கள் பணிகளை முடக்கலாம் என பாஜக நினைக்கிறது. எனது குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசுகிறது.

வீடுகளை எங்களிடம் இருந்து பறிக்கலாம். ஆனால், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை பறிக்க முடியாது.

மூன்று மாதங்களுக்கு முன்பு என்னுடைய உடமைகளை வீட்டில் இருந்து தூக்கி வீசினர். தற்போது மீண்டும் அதே வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லி மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அவர்கள் எங்கள் இருப்பிடங்களை எடுத்துக்கொண்டாலும் மக்கள் நலனுக்கான எங்கள் சேவைகளை நிறுத்த முடியாது. மக்களுக்கான சேவை குறித்து பாஜகவுக்கு அக்கறை இல்லை.

பள்ளிக் குழந்தைகளுக்காக கல்வி, மக்களுக்கான மின்சார வசதி என எது குறித்தும் பாஜகவுக்கு கவலை இல்லை. அவர்கள் நோக்கமெல்லாம், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக செயல்படுவது மட்டுமே என அதிஷி விமர்சித்தார்.

இதையும் படிக்க | இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments