கோப்புப் படம் 
இந்தியா

ஆற்றில் சிக்கிய படகு வீடு! மீட்புப் பணியில் தேசிய படை!

மகாராஷ்டிரத்தில் படகு வீடொன்று ஆற்றின் நடுவில் சிக்கியதைப் பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே சிக்கிய படகு வீட்டிலுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பால்கர் மாவட்டத்தின், மஸ்வான் பகுதியிலுள்ள சூர்யா ஆற்றில் இன்று (ஜூன் 24) காலை, படகு வீடொன்று பயணம் செய்துள்ளது. அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் ஆற்றின் நடுவே ஆழமானப் பகுதியில் அந்தப் படகு சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவொன்றும், மாநில தீயணைப்புப் படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், அந்த படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தில் பயணிகளின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

சின்ன கண்ணன் அழைக்கிறான்..!

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

கேதார்நாத் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு: மகாராஷ்டிர பக்தர் பலி

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

SCROLL FOR NEXT