ராஜஸ்தான்(கோப்புப்படம்)  
இந்தியா

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இரு உடல்கள் மீட்பு

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெண் மற்றும் இளைஞனின் பகுதியளவு சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், உடல் சிதைவின் அளவைப் பார்க்கும்போது, ​​இருவரும் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்ததாகத் தெரிகிறது.

உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. ரவிக்குமார் (18) என்ற நபரின் பாகிஸ்தானிய சிம் கார்டு மற்றும் அடையாள அட்டையும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது.

சர்வதேச எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் சுமார் 10-12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாதேவாலா பகுதியில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.

உடல்கள் ராம்கர் சமூக சுகாதார மைய பிணவறைக்கு அனுப்பப்பட்டன. உடற்கூராய்வுக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்.

சிறுமியும் இளைஞரும் இந்திய குடிமக்களா அல்லது பாகிஸ்தானிய குடிமக்களா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விஷயம் மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

summary

Bodies of minor girl, youth found near Indo-Pak border in Rajasthan

ஏலகிரி மலையில் கோடை விழா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

SCROLL FOR NEXT