முகப்பு
இந்தியா

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

புல்வாமாவில் உமரின் வீடு இடிக்கப்பட்டது பற்றி...

Updated On : 14 நவம்பர் 2025, 8:25 am IST
புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம் - PTI
பகிர்:

தில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய மருத்துவர் உமர் நபியின் வீட்டைப் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

தில்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் பயங்கரவாதத் தாக்குதல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையும் இதனை உறுதி செய்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியவர் ஃபரிதாபாத்தில் பணிபுரியும் மருத்துவர் உமர் நபி என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் உமர் நபியில் சொந்த கிராமத்தில் உள்ள அவரது வீட்டைப் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது.

summary

Delhi blast: Umar's house in Pulwama demolished

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments