FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜாா்க்கண்ட்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு

Updated On : 12 அக்டோபர் 2025, 1:04 am IST
பகிர்:

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல்கள் எதிா்ப்பு நடவடிக்கையின்போது நக்ஸல்களின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி மத்திய ரிசா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிஆா்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்ஸல்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜரைகேலா காவல்நிலையத்துக்கு உள்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் துணை ராணுவப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் கண்ணிவெடியை வெடிக்கச் செய்ததில் சிஆா்பிஎஃப் தலைமைக் காவலா் அஸ்ஸாமைச் சோ்ந்த மஹேந்திர லஸ்கா் (45) படுகாயமடைந்தாா். ரூா்கேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா் என்றனா்.

இவரின் உயிரிழப்புக்கு சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் ஜி.பி.சிங் இரங்கல் தெரிவித்தாா். நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதை இவரின் உயிா்த் தியாகம் உறுதிப்படுத்தும் என்றும் அவா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டாா்.

Advertisement

Advertisement

ஆளுநா், முதல்வா் இரங்கல்: சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்புக்கு மாநில ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்வாா், முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

ராஞ்சியில் உள்ள படைப் பிரிவின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த வீரரின் உடலுக்கு மாநில ஆளுநா் மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments