முகப்பு
இந்தியா

மணிப்பூரில் புதியதாக 129 பேருக்கு டெங்கு! 4000-ஐ நெருங்கும் பாதிப்புகள்!

மணிப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து...

Updated On : 30 அக்டோபர், 2025 at 1:57 PM
மணிப்பூரில் டெங்கு பரவல்
பகிர்:

மணிப்பூர் மாநிலத்தில், புதியதாக 129 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

மணிப்பூரில், புதியதாக 129 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்; இதன்மூலம், நிகழாண்டில் (2025) டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 3,594 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரை 7,883 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும்; டெங்கு பாதிப்பால் பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் ஒருவர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகப்படியாக மேற்கு இம்பால் மாவட்டத்தில் 2,507 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், கிழக்கு இம்பால் - 655, பிஷ்னுப்பூர் - 102, தௌபல் -84, சேனாபதி - 63, காக்சிங் - 45, உக்ருல் - 44 மற்றும் சந்தேலில் - 25 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 2,463 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சூர்ய காந்த்!

summary

In Manipur, 129 new dengue cases have been confirmed, taking the total number of cases to 3,594.

முழு கட்டுரையைப் படிக்க →