மணிப்பூரில் டெங்கு பரவல்  (கோப்புப் படம்)
இந்தியா

மணிப்பூரில் புதியதாக 129 பேருக்கு டெங்கு! 4000-ஐ நெருங்கும் பாதிப்புகள்!

மணிப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூர் மாநிலத்தில், புதியதாக 129 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

மணிப்பூரில், புதியதாக 129 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்; இதன்மூலம், நிகழாண்டில் (2025) டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 3,594 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரை 7,883 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும்; டெங்கு பாதிப்பால் பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் ஒருவர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகப்படியாக மேற்கு இம்பால் மாவட்டத்தில் 2,507 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், கிழக்கு இம்பால் - 655, பிஷ்னுப்பூர் - 102, தௌபல் -84, சேனாபதி - 63, காக்சிங் - 45, உக்ருல் - 44 மற்றும் சந்தேலில் - 25 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 2,463 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சூர்ய காந்த்!

In Manipur, 129 new dengue cases have been confirmed, taking the total number of cases to 3,594.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் ஏன் கேரளத்தைப் புறக்கணித்தீர்கள்? விளக்கமளிக்க வேண்டும்! - பினராயி விஜயன்

87 ஆண்டுகால சாதனை முறியடிப்பு; 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று வரலாறு படைத்த அல்கராஸ்!

தமிழ்நாட்டுக்காக எதுவுமில்லை: கனிமொழி எம்.பி.

மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்தப் பொருள்களின் விலை குறையும்?

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை! | Nirmala Sitharaman |

SCROLL FOR NEXT