ஹேக் செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் தளப் பக்கம்!
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் 'எக்ஸ்' தளப் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் 'எக்ஸ்' தளப் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது.
ஹேக் செய்த பிறகு ஹேக்கர்கள் அதில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி கொடிகளின் படங்களை பதிவிட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் களம்காணும் நிலையில் இரண்டு இஸ்லாமிய நாடுகளின் புகைப்படங்கள் அடங்கிய காட்சிகளை ஹேக்கர்கள் நேரலையில் ஒளிபரப்பியுள்ளனர்.
Advertisement
Advertisement
இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
நாங்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தோம். துணை முதல்வரின் எக்ஸ் கணக்கைக் கவனித்துக்கொள்ளும் எங்கள் குழு பின்னர் கணக்கை மீட்டெடுத்தது என்று அந்த அதிகாரி கூறினார்.
ஹேக் செய்யப்பட்ட 'எக்ஸ்' தளப் பக்கத்தை மீட்டெடுக்க 30 முதல் 45 நிமிடங்கள் ஆனது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Maharashtra Deputy Chief Minister Eknath Shinde's 'X' handle was found to be hacked on Sunday, with hackers posting images of flags of Pakistan and Turkey, an official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.