மணிப்பூரில் 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் அழிப்பு
மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.
மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.
மணிப்பூரின், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஷிஜா பொது உயிரியல் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அழித்ததாக சனிக்கிழமை காவல் துறை தெரிவித்துள்ளது.
அழிக்கப்பட்ட போதைப்பொருள்களில் ஹெராயின் (6 கிலோ), பிரவுன் சுகர் (87 கிலோ) மற்றும் கஞ்சா (182 கிலோ) ஆகியவை அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மணிப்பூர் காவல் துறை தலைவர் ராஜீவ் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடுமையான மேற்பார்வையின் கீழ் போதைப் பொருள்கள் அழிப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மீண்டும் பயன்பாட்டுக்குச் செல்வதைத் தடுக்க, 6 மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமான இடைவெளியில் போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சாலைத் தடுப்பில் மோதி 5 மாணவர்கள் பலி!
பிரதமரின் முயற்சி மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், நாங்கள் எப்போதும் போதைப்பொருள்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். நாங்கள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் தொடர்பில் உள்ளோம்.
நாடு முழுவதும் உள்ள நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய முக்கிய வழக்குகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டு, சரியான முறையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
Manipur Police on Saturday destroyed over 330 kg of seized drugs at the Shija Common Bio Medical Waste Treatment facility in Imphal West district, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.