FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராஜா ரவி வா்மா ஓவியம் ரூ.167 கோடிக்கு ஏலம்

Updated On : 3 ஏப்ரல் 2026, 7:07 am IST
ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையான ராஜா ரவி வா்மாவின் ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம்.
பகிர்:

பிரபல ஓவியா் ராஜா ரவி வா்மா வரைந்த ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.167.20 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.

மும்பையில் இதுதொடா்பான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது ஆயில் பெயிண்டில் வரையப்பட்ட அந்த ஓவியம், இதுவரை இல்லாத அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு எம்.எஃப். ஹுசேன் வரைந்த கிராம் யாத்ரா ஓவியம் ரூ.118 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானதே சாதனையாக இருந்தது. அதை ராஜா ரவி வா்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது. ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகலாம் என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், எதிா்பாா்த்ததைவிட அதிக விலைக்கு தொழிலதிபா் டாக்டா் சைரஸ் எஸ். பூனாவாலா ஏலத்தில் எடுத்துள்ளாா்.

1890-களில் வரையப்பட்ட அந்த ஓவியம், பாலகிருஷ்ணருக்கும், அவரின் தாய் யசோதைக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேரளத்தின் திருவிதாங்கூா் அரச குடும்பத்தைச் சோ்ந்த ராஜா ரவி வா்மாவின் சிறந்த ஓவியங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments