முகப்பு
இந்தியா

ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் குறித்து...

Updated On : 8 ஏப்ரல் 2026, 5:35 pm IST
மெட்ரோ ரயில் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

ஜெய்ப்பூரில், ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் ஏற்கெனவே 11.64 கி.மீ. நீளத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு, முக்கிய வர்த்தக மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உள்பட 11 நிறுத்தங்களுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதியதாக ரூ. 13,037.66 கோடி மதிப்பில் வடக்கு - தெற்கு வழித்தடத்தில் சுமார் 41 கி.மீ. தொலைவுக்கு ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஏப். 8) ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, இந்தப் புதிய மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வரும் 2031 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும், இதற்கான செலவில் மத்திய அரசு 50 சதவீதமும் மற்றும் மாநில அரசு 50 சதவீதமும் நிதி ஒதுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெய்ப்பூரில் 11.64 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 60,000 பேர் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Union Cabinet has approved the second phase of the Jaipur Metro Rail project, valued at Rs 13,000 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.