மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி
மதுராவில் யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராவில் யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் பஞ்சாபைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பிருந்தாவனத்தில் உள்ள யமுனையில் வெள்ளிக்கிழமை மதியம் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
படகு ஆழமான நீரினுள் சென்றுகொண்டிருந்தபோது, மிதக்கும் படகுத்துறையின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர். இதுவரை 16 முதல் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக அப்பகுதியில் மிதவைப் பாலம் ஒன்று சமீபத்தில் அகற்றப்பட்டுள்ளது. அதனால் சில மிதவைப் பால உருளைகள் ஆற்றில் மிதந்துள்ளன.
அதன் ஒன்றின் மீதுதான் படகு மோதியிருக்கலாம் என்று குறிப்பிட்டனர்.