FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வியத்நாம் படகு விபத்து! பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் யார் யார்?

வியத்நாமில் விபத்துக்குள்ளான படகில் தமிழர்கள் உள்பட பயணித்தவர்கள் விவரம் பற்றி...

Updated On : 11 ஜூலை 2026, 5:21 pm IST
வியத்நாம் படகு விபத்து - X
பகிர்:

வியத்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு வியத்நாமில் உள்ள பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரி சென்றுள்ளனர். அவர்களுடன் 4 ஊழியர்களும் இருந்தனர்.

இன்று காலை 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து வியத்நாம் படகில் சென்ற 32 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் பெயர்கள் அதிகமாக இருக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் 10 பேர் தமிழர்கள் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதுபற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாக வியத்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உதவி எண்கள் அறிவிப்பு

வியத்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

summary

Vietnam boat accident: Man from Palani killed, Who are the 32 people travelled?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments