முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!
மேற்கு வங்கத்தில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
முர்ஷிதாபாத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அருகே, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியில் இருந்து விலகிய ஹுமயூன் கபீர் தொடங்கிய ஆம் ஜனதன் உன்னயான் கட்சியினரிடையே கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் இரு கட்சியினரும் கற்களை வீசியும், மட்டை போன்ற பொருள்களைக் கொண்டும் தாக்கிக்கொண்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
Advertisement
கவலரத்திற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதரி, வாக்குச்சாவடிகளில் சென்று நேரில் ஆய்வு செய்தார். சுமூகமாக வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்யும் வகையில், இவ்வாறு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.