ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!
இந்திய வான்வழியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதற்கான தடை நீட்டிப்பு...
இந்திய வான்வழியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய வான்வழியில் நுழைவதற்கு, பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான விமானங்கள் உள்பட அந்நாட்டைச் சேர்ந்த அனைத்து வகையான விமானங்களுக்கும் மே 23 அன்று இரவு 11.59 வரையில் அனுமதி வழங்கப்படாது என வியாழக்கிழமை (ஏப். 23) அன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடையை, மே 24 அன்று வரை நீட்டிப்பதாக, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால், ஏராளமான விமானங்கள் சர்வதேச நகரங்களுக்கு பாகிஸ்தான் வான்வழியைத் தவிர்த்து நீண்ட பாதைகளில் பயணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடந்த 1 ஆண்டாக இந்திய வான்வழியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 2025 ஏப். 30 அன்று முதல் பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. ஆனால், இந்தியாவுக்கு முன்னதாகவே கடந்த 2025 மே 24 முதல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
extending the ban on Pakistani aircraft flying through Indian airspace until May 24.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.