முகப்பு
இந்தியா

ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் அரசாங்கத்தின் தோல்வியால் மக்கள் அவதியுறுவதாக பிரதமர் மோடி பிரசாரம்...

Updated On : 26 ஏப்ரல், 2026 at 5:27 PM
பிரசார மேடையில் பிரதமர் நரேந்திர மோடி - பிடிஐ
பகிர்:

மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் அரசாங்கத்தின் தோல்வியால் மக்கள் நிர்கதியாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 26) குற்றம் சாட்டினார்.

மேலும், பாஜக ஆட்சி அமைந்ததும் மாநிலத்திலுள்ள ரெளடிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்கு வங்கத்திற்கு முதல் கட்டத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி முடிந்த நிலையில், ஏப். 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

இதனிடையே வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

summary

West Bengal election 2026 PM Narendra modi campaign TMC’s corruption and governance failures

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.