மேற்கு வங்கத்தில் அதிகாரம் யாருக்கு? வெளியானது கருத்துக் கணிப்பு
மேற்கு வங்கத்துக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்...
மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, 152 தொகுதிகளுக்குஏப்ரல் 23-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கும், இன்று (ஏப். 29) வாக்குப் பதிவு நடந்தது. முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கும் இன்றுதான் தேர்தல் நடந்தது.
மேற்கு வங்க பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்...
Advertisement
பி- மார்க் கருத்துக் கணிப்பின்படி,
திரிணமூல் காங்கிரஸ் 118 - 138 இடங்களையும், பாஜக 150 - 175 இடங்களையும், காங்கிரஸ் 2 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கிறது.
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பின்படி,
திரிணமூல் காங்கிரஸ் 125 - 140 இடங்களையும், பாஜக 146 - 161 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கின்றன.
முதற்கட்ட வாக்குப்பதிவு அஸ்ஸாம், கேரளம், புதுவையில் ஏப். 9-ல் நடந்து முடிந்தது. ஏப். 23 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தலும் முடிந்து, 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்று முடிந்ததும் கருத்துக் கணிப்புகள் வெளியானது.
ஆனால், தேர்தல் முடிவுகள் அப்படியே இருக்கும் என்பது உறுதியில்லை. இதுவரை அப்படியே நடந்ததும் இல்லை என்பதுதான் வரலாறு.