வரிசையில் நின்று வாக்களித்த மிதுன் சக்ரவர்த்தி!
பாஜக தலைவரான மிதுன் சக்ரவர்த்தி தனது வாக்கைச் செலுத்தினார்.
பிரபல பாலிவுட் நடிகரும், பாஜக தலைவரான மிதுன் சக்ரவர்த்தி கிழக்கு கொல்கத்தாவின் பெல்காச்சியா பகுதியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
எந்தவிதமான சிறப்புச் சலுகைகளையும் கோராமல், வரிசையில் நின்று ஒரு சாதாரண வாக்காளரைப் போலவே வாக்களித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
Advertisement
Advertisement
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் காணப்பட்டதைப் போலவே, இரண்டாம் கட்டத்திலும் அதிக அளவிலான வாக்குப்பதிவு இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எனக்கு எந்தச் சலுகையும் தேவையில்லை. நான் ஒரு சாமானியரைப் போலவே வாக்களித்தேன். தற்போதைய போக்குகளைக் கவனிக்கும்போது, வாக்குப்பதிவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்படி அமைந்தால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நீங்களே கணித்துக்கொள்ளலாம்.
திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் அருப் ராய், ஹவுரா மாவட்டத்தில் உள்ள கசுண்டியா மகாகாளி வித்யாலயத்தில் தனது வாக்கைச் செலுத்தினார். மழை மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்ட சூழலில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
நதியா மாவட்டத்தில், ரணகாட் தொகுதிக்கு உள்பட்ட போரா ஜியாகூர் தொடக்கப்பள்ளியில், பாஜக வேட்பாளர் ஜகந்நாத சர்க்கார் தனது மனைவியுடன் இணைந்து வாக்களித்தார்.
தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் ஆற்றிய பங்கை அவர் பாராட்டினார்; அதேவேளையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Actor and BJP leader Mithun Chakraborty cast his vote in East Kolkata's Belgachia on Wednesday and hoped for a high voter turnout as was witnessed in the first phase of West Bengal Assembly polls.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.