FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேசிய தேர்வுகள் முகமை தொடர்பான முக்கிய விவகாரங்கள்: மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆய்வு

தேசிய தேர்வுகள் முகமை தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து பிரஹலாத் ஜோஷி நடத்திய ஆய்வு குறித்து...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 10:17 pm IST
தேசிய தேர்வுகள் முகமை தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி - எக்ஸ்
பகிர்:

தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆய்வு செய்தார்.

தேசிய தேர்வுகள் முகமை தொடர்பான விவகாரங்கள் குறித்து, மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

தேசிய தேர்வுகள் முகமையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது, தேர்வு நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்தும், தேர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, நிறுவன ரீதியான கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல், செயல்பாடுகளைச் சீரமைத்தல் மற்றும் மாணவர்களின் புகார்களுக்கு விரைந்து பதிலளிப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு மாணவரின் நலனை உறுதி செய்வது, வெளிப்படையான கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், நம்பகமான, மற்றும் வெளிப்படையான தேர்வு முறையை உருவாக்குவதிலே அரசின் முக்கிய கவனம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

summary

Union Education Minister Pralhad Joshi today held a meeting with the Secretary and senior officials of the Education Ministry on matters concerning the National Testing Agency (NTA)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments