FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒரேயொரு பாஜக எம்எல்ஏவைத் தவிர ஒட்டுமொத்த தமிழ்நாடும்..! ப. சிதம்பரம்

நாடாளுமன்ற வளாகத்தில் ப. சிதம்பரம் பேசியது...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:43 pm IST
ப. சிதம்பரம் - ANI
பகிர்:

நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் சீன நாடாளுமன்றம் போல மாறிவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் என இரு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறின. இன்று தொகுதி மறுவரையறையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக நான் கருதுகிறேன். அது சரியான நடவடிக்கைதான்.

ஒரே ஒரு பாஜக உறுப்பினரைத் தவிர, ஒட்டுமொத்த தமிழ்நாடும் இதில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 543 என்ற எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும். இல்லையெனில், அது சீன நாடாளுமன்றத்தைப் போல மாறிவிடும். அது ஒரு மக்கள் கூட்டமாகிவிடுமே தவிர, உண்மையான நாடாளுமன்ற அவையாக இருக்காது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாகக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையைச் சரியாகச் செயல்படுத்தியதற்காக அந்த மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட மசோதா குறித்து, "அவர்கள் இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல், மசோதாவையே திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம், கூச்சல் குழப்பங்களுக்கு இடையே மசோதாவை நிறைவேற்றுவதைவிட இது மேல். நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் குழுவில் காங்கிரஸ் இந்த மசோதாவை எதிர்க்கும். இந்த மசோதா கைவிடப்பட வேண்டும். இது சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு கொண்டுவரப்பட்ட ஒரு தீய நோக்கமுள்ள மசோதா" என்றார்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments