குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை!
குடும்பத்துடன் இறுதிநாள்களைக் கழிக்கும் வகையில் கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி, தன்னுடைய 105 வயது வரை சிறையில் கழித்த நிலையில், இறுதி நாள்களை குடும்பத்துடன் இருக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
1920ஆம் ஆண்டு பிறந்தவர் ராசிக் மண்டல். இவர் கடந்த 1988ஆம ஆண்டு கொலை வழக்கில் கைதாகி, 1994ஆம் ஆண்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மால்டா மாவட்டத்தில் பிறந்த ராசிக், தன்னுடைய 68 வயதில் கைதாகி, சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார். ஆயுள் தண்டனையை ரத்துக் கோரிய மனுவை 2018ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றமும், 24 ஆண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தன.
Advertisement
Advertisement
ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராசிக், வயது முதுமை காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்தான், ராசிக்கின் மகன் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்னும் அவர் உயிருடன் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியது. பிறகு, அவரை ஏன் இடைக்கால பரோலில் விடுவிக்க வேண்டும். நிரந்தரமாக விடுதலை செய்து விடலாமா? இருக்கப்போகும் சிறிது காலத்தை அவர் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கட்டுமே என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.