நேபாள வெள்ளம்: இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க ராகுல் வலியுறுத்தல்!
நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளது பற்றி...
நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று (ஆக. 26) காலை கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் ஆற்று வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 95 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெவித்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
நேபாள வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போன சம்பவம் ஆழ்ந்த கவலையளிக்கிறது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய செய்திக்காக காத்திருக்கும் குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன.
காணாமல் போன இந்தியக் குடிமக்களைக் கண்டறிந்து, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதிசெய்ய, நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
நேபாள மக்களுக்கும், இந்தத் துயரமான பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருடன் நான் உறுதுணையாக நிற்கிறேன் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has urged the Central Government to take all necessary steps to ensure the safe return of Indians affected by the floods in Nepal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.