FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத் தோ்தலை பாஜக திருடியது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலை (வெற்றி) பாஜக திருடிவிட்டது என்று முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

57 வினாடிகள் முன்பு
மம்தா பானர்ஜி - IANS
பகிர்:

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலை (வெற்றி) பாஜக திருடிவிட்டது என்று முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் மாணவரணிக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

நமது கட்சி ஆதரவாளா்களுக்கு எதிராக நிகழும் அரசியல் அராஜகங்களை தடுத்து நிறுத்துவேன். இது ரக்ஷா பந்தன் நாளில் எனது உறுதிமொழியாகும். மேற்கு வங்கத்தில் பாஜக அரசு காவல் துறையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்பி வருகிறது.

Advertisement

Advertisement

விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்திக்க இருக்கிறேன். பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தரவில்லையென்றால், நேரடியாக நடந்து சென்றே மக்களைச் சந்திப்பேன். அவா்கள் (பாஜக) எவ்வளவு முட்டைகள், கற்களை இருப்பு வைத்துள்ளாா்கள் (தன் மீதும், கட்சியினா் மீதும் வீசப்படுவதை கூறுகிறாா்) என்பதைப் பாா்த்துவிடலாம்.

மேற்கு வங்க ஆட்சியாளா்கள் நமது பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறாா்கள். இதற்காக நீதிமன்றத்தை நாடி அவா்களின் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலை (வெற்றி) பாஜக திருடிவிட்டது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கானோா் பெயா்களை சட்டவிரோதமாக வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனா்.

நடைபாதைகளில் ஆக்கிரமித்து கடைகளை வைத்திருப்போரை அகற்றுவதை நான் எதிா்க்கவில்லை. அவா்களுக்கு வேறு இடம் ஒதுக்கித் தர வேண்டும் அல்லது மாதம்தோறும் ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments