போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் - பிரதமர் மோடி சந்திப்பு பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
கிா்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாடு இன்று தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சா்வதேச தலைவா்கள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, ஈரானும் அமெரிக்காவும் மாறிமாறி இன்று தாக்குதல் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி இன்று ஈடுபட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “பிஷ்கெக்கில் அதிபர் மசூத் பெஷேஷ்கியனைச் சந்தித்தேன். பல்வேறு துறைகளில் ஈரானுடனான இந்தியாவின் நீண்டகால நட்பை வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். வரும் காலங்களில் எங்கள் வர்த்தகப் பரிமாற்றங்களை விரிவுபடுத்தவும் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றவும் நாங்கள் விரும்புகிறோம்.
இந்தப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். நீடித்த அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கிர்கிஸ்தான் அதிபர் சடிர் ஜபரோவ்வுடனும், ஆர்மீனியா பிரதமர் நிகோல் பஷினியனுடனும் பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
War tensions! PM Modi meets Iranian President!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.