அனுராக் தாக்கூர்  படம் - ANI
இந்தியா

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பிசிசிஐ விவகாரங்களில் தலையிட அனுராக் தாக்கூருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னாள் தலைவரும், பாஜக மக்களவை உறுப்பினருமான அனுராக் தாக்கூருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

பிசிசிஐயில் சீர்திருத்தங்களையும், புதிய மேம்பாடுகளையும் கொண்டுவருவதற்காக உச்ச நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு லோதா குழுவை நியமித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை அப்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் அமல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அனுராக் தாக்கூர் மற்றும் அப்போதைய பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவியிலிருந்து நீக்கியதுடன், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கில் அனுராக் தாக்கூர் நேரில் ஆஜராகி தனது தவறுகளை ஒப்புக்கொண்டு முழுமையான மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விவகாரங்களில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுராக் தாக்கூருக்கு 2017 ஆம் ஆண்டு விதித்த தடையில் மாற்றங்களைக் கொண்டுவரக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி தலைமையிலான அமர்வு இந்த விவகாரத்தில் அனுராக் தாக்கூரின் மீது வாழ்நாள் தடை விதிக்கத் தேவையில்லை எனக் கூறி வியாழக்கிழமை (பிப். 5) தீர்ப்பளித்துள்ளது.

The Supreme Court has lifted the ban imposed on former president Anurag Thakur from interfering in the affairs of the BCCI.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

SCROLL FOR NEXT