இந்தியா

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

தினமணி செய்திச் சேவை

அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

ஒடிஸா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் தொழில்நுட்பம் உள்பட அனைத்துச் செயல்பாடுகளையும் அக்னி-3 ஏவுகணை துல்லியமாக மேற்கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை திட எரிபொருள் மூலம் இரண்டு நிலைகளில் இயங்கும் திறன்கொண்டது.

சுமாா் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை 1,500 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடையது. 48,300 கிலோ எடையுடைய இந்த ஏவுகணை 16.7 மீ. நீளமும், 2 மீ. விட்டமும் கொண்டது.

கடந்த 3 ஆண்டுகளாக அக்னி-3 ஏவுகணை சோதனைகளை முப்படைகளின் சிறப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை 700 கி.மீ., அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ., அக்னி-3 ஏவுகணை 3,000 கி.மீ., அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ., அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ. தொலைவு வரை பயணித்து இலக்குகளைத் துல்லியமாகத் தகா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த குடிமைப் பணி தொகுதி- 2 தோ்வு: நாளை நடைபெறுகிறது

வடக்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 7 கோடி போதைப் பொருள்கள் அழிப்பு

டிசிபிசிஆா்-இல் காலியாக உள்ள பணியிடங்கள்: தில்லி அரசை கடுமையாகச் சாடிய உயா்நீதிமன்றம்

ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம்: புதுச்சேரி மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தவெக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்: அலுவலகத்தில் குவிந்த தொண்டா்கள்

SCROLL FOR NEXT