அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி
அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
ஒடிஸா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் தொழில்நுட்பம் உள்பட அனைத்துச் செயல்பாடுகளையும் அக்னி-3 ஏவுகணை துல்லியமாக மேற்கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை திட எரிபொருள் மூலம் இரண்டு நிலைகளில் இயங்கும் திறன்கொண்டது.
Advertisement
Advertisement
சுமாா் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் அக்னி-3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை 1,500 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடையது. 48,300 கிலோ எடையுடைய இந்த ஏவுகணை 16.7 மீ. நீளமும், 2 மீ. விட்டமும் கொண்டது.
கடந்த 3 ஆண்டுகளாக அக்னி-3 ஏவுகணை சோதனைகளை முப்படைகளின் சிறப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை 700 கி.மீ., அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ., அக்னி-3 ஏவுகணை 3,000 கி.மீ., அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ., அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ. தொலைவு வரை பயணித்து இலக்குகளைத் துல்லியமாகத் தகா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.