முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக முடக்கம்!

மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக முடக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:55 AM
மக்களவை
பகிர்:

எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் முடங்கியிருக்கிறது.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மக்களவையை முடக்கினர்.

இந்த நிலையில், நேற்றுமுதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கவிருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

Advertisement

இன்று காலையும் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன.

summary

Lok Sabha proceeding adjourn for sixth consecutive day!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments