கோடி ரூபாய் கேட்டு ரன்வீருக்கு மிரட்டல்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒருவர் கோடிக்கணக்கான பணம் கேட்டு, குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.
இதனையடுத்து, ரன்வீர் சிங்கின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மிரட்டல் விடுத்தல் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, காவல்துறையினரும் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.
கடந்த வாரத்தில், தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டியின் வீட்டுக்கு வெளியே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
Ranveer Singh receives threatening WhatsApp voice note
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.