பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒருவர் கோடிக்கணக்கான பணம் கேட்டு, குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.
இதனையடுத்து, ரன்வீர் சிங்கின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.
மிரட்டல் விடுத்தல் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, காவல்துறையினரும் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.
கடந்த வாரத்தில், தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டியின் வீட்டுக்கு வெளியே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.