குத்திக் கொலை (கோப்புப் படம்) 
இந்தியா

மகாராஷ்டிர கல்லூரியில் மாணவர் குத்திக் கொலை! 4 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் உள்ள கல்லூரியில் மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற மோதலில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

லத்தூரின் அவுசா சாலையில் உள்ள கல்லூரியில், கடந்த திங்கள்கிழமை (பிப். 16) மாலை 3 ஆம் ஆண்டு படிக்கும் இருவேறு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக வெடித்த இந்த மோதலில் இருதரப்பினரும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மோதலில் சிலர் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவ்வழியாகச் சென்ற விக்ரம் நாராயண் (வயது 20) எனும் மாணவர் ஒருவரை மோதலில் ஈடுபட்டவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த அந்த மாணவர் பரிதாபமாகப் பலியானார்.

இத்துடன், தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட 4 மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் கல்லூரியில் மாணவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டது அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க வேண்டுமெனவும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் லத்தூரின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அமித் தேஷ்முக் காவல் துறையிடம் வலியுறுத்தியுள்ளார்.

A student was stabbed to death in a clash at a college in Maharashtra's Latur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருணாநிதி கவலையோடு பதிவு செய்த சூழல் இன்னமும் மாறவில்லை: தங்கம் தென்னரசு

துருவ் - ருக்மணி நடிப்பில் புதிய திரைப்படம்?

நெல் ஜெயராமனின் பாரம்பரிய ரகங்கள்: 900 மெட்ரிக் டன் நெல் விதைகள் உற்பத்தி!

செயற்கை நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் மத்திய அரசு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT