முகப்பு
இந்தியா

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

பிகாரில் விற்பனையாளர் ஒருவர் நாற்காலியிடையே மறைத்துவைத்து மது கடத்திச் சென்றது குறித்து...

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:35 PM
நாற்காலியில் மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மதுபாட்டில்கள் - படம் - எக்ஸ்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:31 PM

பிகாரில் விற்பனையாளர் ஒருவர் நாற்காலியிடையே மறைத்துவைத்து மது கடத்திச் சென்ற சம்பவம் காவலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:31 PM

நாற்காலியின் அமரும் பாகத்தை வெட்டி எடுத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிவைத்து அதன் நடுவில் மது பாட்டில்களைக் கடத்திச் சென்றுள்ளார்.

பிகாரில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாக கடத்திச்சென்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நாற்காலிகளை அடுக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றவரை சோதனை செய்ததில், அவர் மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:31 PM

இதன் பிறகு நாற்காலிகளை ஒன்றொன்றாக எடுத்துப் பார்க்கையில், அதனுள் ஏராளமான மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.