தில்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
தில்லி கலவரம் தொடர்பான வழக்கில் ஜாமீன் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக..
தில்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமையன்று ஒத்திவைத்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய் இந்த உத்தரவை ஒத்திவைத்தார். நீதிபதி இன்று மாலை உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
விசாரணை தொடங்கப்படாமலே தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தங்கள் அடிப்படை சுதந்திர உரிமையை மீறுவதாகக் கூறி காலித் மற்றும் இமாம் ஆகியோர் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.