வியத்நாம் படகு விபத்து வருத்தமளிக்கிறது: லாவா நிறுவனம் அறிக்கை!
வியத்நாம் படகு விபத்து தொடர்பாக லாவா நிறுவனம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
வியத்நாம் படகு விபத்து தொடர்பாக லாவா நிறுவனம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர்.
இன்று பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் பலியாகினர். இந்தப் படகில் 20 தமிழர்கள் சென்றதாகக் கூறப்பட்டது. அதில், 10 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
சுற்றுலா சென்றவர்களில் பலரும் சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், லாவா நிறுவனம் இரங்கல் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “வியத்நாமில் இன்று நடந்த துயரமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களும், குழுவினரும் பாதிப்படைந்துள்ளனர்.
எங்கள் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த தகவல்களுக்காக, வியத்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குவோம். இந்தியாவிலும் வியத்நாமிலும் உள்ள எங்கள் குழுக்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது.
ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் சார்பில் அங்கு ஒரு கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தகவல் அல்லது உதவி தேவைப்படும் குடும்பங்கள் +84 36 281 7930, +84 91 552 37 14, அல்லது +84 33 452 0414 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
விபத்து பற்றி அதிகாரிகள் தெரிவிக்கும் மேலதிகத் தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை உரிய நேரத்தில் தொடர்ந்து வழங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Vietnam boat accident is distressing: Lava company statement!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.