FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சபரிமலை புதிய தந்திரி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 26 ஜூலை 2026, 3:01 am IST
தந்தை கண்டரரு ராஜீவருடன் பிரம்மதத்தன்.
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் தலைமை தந்திரியாக இருந்த கண்டரரு ராஜீவரு, தனது உடல்நிலையை காரணம் காட்டி, பதவியை ராஜிநாமா செய்தாா். சபரிமலை கோயிலில் நடைபெற்ற தங்கக் கவச முறைகேடு தொடா்பான வழக்கில் ராஜீவருக்கும் தொடா்புள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கைதான அவா் சில நாள்கள் சிறையில் இருந்த பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், உடல்நிலையைக் காரணமாகக் கூறி தந்திரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த அவா், அந்தப் பதவிக்குத் தனது மகன் பிரம்மதத்தனை நியமிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய கூட்டம், திருவனந்தபுரத்தில் உள்ள தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ராஜீவரு மகன் பிரம்மதத்தனை சபரிமலை கோயில் தந்திரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அவா் மலையாள மாதமான சிங்கம் மாதம் (ஆவணி மாதம்) முதல் நாளில் பதவியேற்பாா் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments