FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

10 ஆண்டுகளில் மொபைல் போன் ஏற்றுமதி ரூ. 2.60 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த10 ஆண்டுகளில் மொபைல் போன் ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்துள்ளது குறித்து...

Updated On : 30 ஜூலை 2026, 12:59 pm IST
மொபைல் போன் ஏற்றுமதி அதிகரிப்பு - பிரதிப் படம்
பகிர்:

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மொபைல் போன் ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் பெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 2014 - 2015 காலகட்டத்தில் மொபைல் போன்களின் ஏற்றுமதி சுமார் ரூ. 1,500 என்றிருந்த நிலைஇய்ல், 2025 - 2026 காலகட்டத்தில் சுமார் ரூ. 2.59 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது, மொபைல் போன்களின் ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், இதே காலகட்டத்தில் உள்நாட்டு மொபைல் போன்களின் உற்பத்தி ரூ. 1.9 லட்சம் கோடி (2014 -15) என்றிருந்த நிலையில், 2025 - 26இல் ரூ. 13.11 லட்சம் கோடியாக சுமார் 33 மடங்கு அதிகரித்துள்ளது.

மின்னணு பொருள்களின் ஏற்றுமதியும் ரூ. 38,000 கோடியிலிருந்து ரூ. 4.24 லட்சம் கோடியாக அதிகரித்து, சுமார் 11 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.

summary

Smartphone exports jump 165 times to Rs 2.59 lakh crore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments