முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: மூவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 2 ஜூன் 2026, 12:10 am IST
தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.

இந்த சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம் புணேவை சோ்ந்த இயற்பியல் மொழிபெயா்ப்பாளா் மனீஷா சஞ்சய் ஹவல்தாா், இயற்பியல் ஆசிரியா் தேஜஸ் ஹா்ஷத்குமாா் ஷா, லாத்தூரை சோ்ந்த குழந்தை மருத்துவா் மனோஜ் ஷிருரே ஆகியாரின் சிபிஐ காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

Advertisement

Advertisement

அவா்களை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஜய் குப்தா உத்தரவிட்டாா். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 13 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.