பஞ்சாப் காங்கிரஸில் தலைமை மாற்றம் இல்லை: பூபேஷ் பாகல்
காங்கிரஸில் தலைமை மாற்றத்தை மேற்கொள்ளவது பற்றி..
பஞ்சாப் மாநில காங்கிரஸில் தலைமை மாற்றத்தை மேற்கொள்ளக் கட்சி பரிசீலித்து வருவதாக எழுந்த ஊகங்களை, அம்மாநில பொறுப்பாளரான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பூபேஷ் பாகல் நிராகரித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லமான 10, ராஜாஜி மார்க்கில், கட்சியின் உயர்நிலை தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பூபேஷ் பாகல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தக் கூட்டத்தில் கார்கேவுடன், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், பஞ்சாப் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அதேபோன்று இன்றும் கூட்டம் நடத்தப்பட்டது.
கட்சியின் எதிர்காலச் செயல்பாடு குறித்துத் தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியில் தலைமை மாற்றம் செய்யப்படவுள்ளதாக எழுந்த ஊகங்கள் குறித்துக் கேட்டபோது,
சில நாள்களுக்கு முன்பே நான் கூறியிருந்தேன், அதுகுறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. காங்கிரஸ் கட்சி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இயல்புடையது.
நாங்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டே முன்னோக்கிச் செல்வோம். இவை ஊடகங்களில் பரவும் வெறும் ஊகங்கள் மட்டுமே. தலைமை மாற்றம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.